அதிலும் நாட்டுப்புற கலைகளில் பிரபலமானது
நம் ஊர்தான். கும்மி பாட்டு, ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம்,
பறையாட்டம் , நாட்டுப்புற நடனம்; அனைத்திலும் சிறந்து விளங்கியது
தமிழகம்தான். நாட்டுப்புற கலைகளில் தேவையானது வாய் வழிப்பாட்டு மற்றும்
அதற்கேற்ப பின்னணி இசை போன்றவை கலாச்சார வடிவங்களை உண்மையில்
பிரதிபலிப்பதாகும். இந்த கலைக்களுக்கென்று எந்த ஒரு பயிற்சியும் தேவையில்லை
என்பதுடன் நம் அன்றாட வாழ்வியலில் நடக்கும் சம்பவங்களை அந்த இசைகள்
எதிரொலிப்பதாகும். கதை வடிவில் பாட்டுக்கள் பாடுவது அந்த காலத்து
கிராமப்புற கலைகளின் மற்றொரு சிறப்பாகும். இவ்வாறு இசையின் முலம் கதைகளை
பாடும் கலைகளில் ஒன்றானது வில்லுப்பாட்டு.
மற்ற கிராமிய பாடல்களுக்கும்
வில்லுப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் நாட்டுப்புற
பாடல்களுக்கான அனைத்து அமசங்களும் நிரம்பியுள்ளதாகும். இதற்;கு
பயன்படுத்தும் கருவிகள், பாடும் முறை என அனைத்தும் மக்களை ஈர்க்கும்
விதமாகவே இருந்தது, ஆனால் தற்போது இந்த கலைகள் அழிந்துக் கொண்டேப் போகிறது.
ஆண்களே முன்னிறுத்திக் கொண்டு செல்ல வேண்டிய ஒரு கலையை நயினாரகரம் என்னும்
கிராமத்தில் சுப்புலட்சுமி என்னும் பெண்மணி தமிழ் நாட்டில் மட்டுமின்றி
பிற மாநிலங்களுக்கும் வில்லிசைக் கலையைப் பரப்பியுள்ளார். திருநெல்வேலி
மாவட்டம் தென்காசி வட்டாரத்தில் நயினாரகரம் என்னும் ஊராட்சியில் வாழ்ந்து
வருபவரான இவர் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக வில்லுப்பாட்டை
பாடியுள்ளார்.
வில்லிசை பாடுவது என்பது பாடல் மட்டுமின்றி ஒரு கதையுடன் இசையை சேர்த்து
பாடுவதாகும். இவரின் இந்த திறமை தந்தையார் சங்கரளிங்கத்திடமே வந்துள்ளது
.இவர் பெருமாள் தேவர் எனும் வில்லிசை கலைஞர்ரிடம் பிற்ப்பாட்டு பாடுபவராக
இருந்துள்ளார். இதுவே சுப்புலட்சுமி வில்லிசை கலையில் ஈடுபட ஒரு வித்தாக
இருந்துள்ளது. பின்னர் பெருமாள் தேவரிடமே மாணவியாக சேர்ந்து நான்கு வருடம்
இந்த இசையை கற்றுள்ளார்.
பின்னர் இந்த கலையை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சென்று அரங்கேற்றம்
செய்தார். அத்துடன் பிறமாநிலங்களான மும்பை வரை வில்லிசை கலையை
அரங்கேற்றியுள்ளார். சென்னை பொதிகை தொலைக்காட்சியிலும், திருநெல்வேலி
வானொலி நிலையத்திலும் பல முறை வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
விவசாயத்தை தலைப்பாக கொண்டு வில்லுப்பாட்டு முலம் பல்வேறு விழிப்புணர்வு
நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் . பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை
நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியுள்ளார்
நயினரகரம் அருகே உள்ள சிற்றுரான பால மார்த்தாண்டப்புறத்தில்
இவர் பிறந்துள்ளார். தனது பதிமூன்றாம் வயதில் ஆரம்பித்த வில்லிசை
பயிற்சியை பதினேழாம் வயதில் முடித்து கொண்டு தனது முதல் அரங்கேற்றத்தை
பிறந்த ஊரில் உள்ள முப்படாதியம்மன் கோயிலில் நிகழ்த்தியுள்ளார். தனது 28ம்
வயதில் திருமணம் செய்து கொண்ட இவர் நாளடைவில் தனது கணவரையும் தன்னுடன்
இணைத்து கொண்டு தான் முன்னின்று நடத்தும் நிகழ்ச்சிகளில் பிற்பாட்டு
பாடுபவராக மாற்றியுள்ளார்
பொதுவாக அம்மன், அய்யனார் போன்ற கடவுள்களின் கதைகளும், புராணக்
கதைகளான ராமாயணம், மகாபாரதக் கதைகளையும் மற்றும் விவசாயத்தை சார்ந்த
கதைகளும் வில்லிசை மூலம் தெரியப்படுத்தியுள்ளார். வில்லிசை அரங்கேற்றம்
செய்வதற்கு முன் அதில் உள்ள 9 ராகம், 11 தளங்கள் மட்டும் அல்லாது
கதைகளையும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். இவ்வளவு பெருமைக்குரிய
சுப்புலட்சுமி 5ம் வகுப்பு வரை படித்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
5ம் வகுப்பு வரை படித்திருந்தாலும்,
'வில்லிசை அனாதி' என அழைக்கப்படுகிறார். வில்லுப்பாட்டு என்பது வில்லிசை
அனாதி மட்டும் இல்லாமல் பிற்பாட்டுப்படிப்பவரின் தேவையும் இதற்கு அவசியம்.
ஒரு முழுமையான வில்லிசை என்பது குடம், உடுக்கை, கட்டை மற்றும் கைத்தாளம்
போன்ற வடிவங்கள் இணைத்தால் மட்டுமே நல்ல இசை பிறக்கும். வில்லுப்பாட்டு
மூலம் 25 தங்கப் பதக்கங்களும், மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து
விருதுகளும் போன்ற பல பரிசுகளைப் பெற்றுள்ளார். தற்போது, சுப்புலட்சுமி
வில்லுப்பாட்டு பாடுவத்தில்லை. மேலும், பல நுற்றாண்டுகளாக செழிப்பாக இருந்த
இவ்வகையான கிராமியக் கலைகள் தற்போது நயினாரகரம் மட்டுமின்றி தமிழ்நாட்டில்
குறைந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.
No comments:
Post a Comment