பறையிசை முழக்கத்தோடு நம் தொன்ம ஆட்டக் கலைகள்
கலைகளின் வீச்சு என்பது கலையோடு மட்டும் நின்று விடாமல், அதை
தாண்டியும் பல வடிவங்களில் உருவெடுக்கவல்லது. பாடல், ஆட்டக் கலைகள் என்பது
போராட்டங்களின் வெளிப்பாடாகவும் பிரசாரக் கருவியாகவும் முகம் காட்டுபவை.
உலக அளவில் பாப் மார்லே, இந்தியாவில் நாகண்ணா, எல்லண்ணா, கத்தார்
போன்றோர்களது பாடல்கள், இசை வடிவமாக மட்டுமின்றி மக்களின் கிளர்ச்சிக்கும்
வழி வகுத்தவை. இசையும் ஆட்டமும் பின்னிப் பிணைந்தவை.
தமிழர் இசையின் அடையாளமான பறையிசை முழக்கத்தோடு நம் தொன்ம ஆட்டக் கலைகளை அரங்கேற்றி பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் உள்ளாக்கும் சீரிய பணியை, இன்றைக்கு தமிழகத்தின் பல கலைக்குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. அப்படியாக நாகர்கோவிலில் இயங்கி வருகிறது ‘முரசு கலைக்குழு’. இக்குழுவை தொடங்கியவர்களுள் ஒருவர் செல்வி. மாஸ் கம்யூனிகேஷன் பயின்றவர். இப்போது நாடகத்துறையில் முனைவர் ஆய்வு மேற்கொள்கிறார் என்கிற தகவல்களையெல்லாம் தாண்டி, 32 வகை ஆட்டக்கலையை கற்றுத் தேர்ந்து பயிற்சியும் அளிப்பவர் என்பது இவரது முக்கிய அடையாளம்!
“கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் என் பூர்வீகம். இயற்கையோடு கொஞ்சிக் குலாவுகிற மலைக்கிராம வாழ்க்கை. காற்றாடி மலை எங்களது ஊரின் பெயர்… அது ‘தேவசகாயம் மவுண்ட்’ என பெயர் மாறியதற்கு பின்புலத்தில் ஒரு வரலாறு உள்ளது. 12ம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது கேப்டன் டே லெனாய் தலைமையிலான டச்சுப்படை போர் தொடுத்தது. அப்போது அரசராக இருந்த மார்த்தாண்ட வர்மன், தனது படையைக் கொண்டு போரில் வெற்றி பெற்று, டே லெனாயை கைது செய்தார். சிறையில் இருக்கும் காலகட்டத்தில் டே லெனாயும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படைத் தளபதி நீலகண்டப் பிள்ளையும் நட்பு கொள்கின்றனர்.
கிறித்துவ மதத்தின் கோட்பாடுகளை டே லெனாய் விளக்கவும், அதைக் கேட்ட நீலகண்டப் பிள்ளை கிறித்துவராக மாறி தனது பெயரை தேவசகாயம் என மாற்றிக் கொள்கிறார். இந்த மதமாற்றம் பிடிக்காத மார்த்தாண்ட வர்மன் தளபதி தேவசகாயத்தை இந்து மதத்தைப் பின்பற்றக் கூறுகிறார். இதற்கு மறுத்த காரணத்தால் தேவசகாயம் காற்றாடி மலையில் ஒரு சிறையில் அடைக்கப்பட்டு, பின் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால்தான் காற்றாடி மலை, தேவசகாயம் மவுண்ட் ஆனது.எங்களது ஊரில் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை ‘விபூதி புதன்’ கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
விபூதி புதனுக்கு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ச்சியாக 10 நாளைக்குத் திருவிழாதான். சிறு வயதிலிருந்தே தேவாலயத்தில் நடக்கும் கொண்டாட்ட நிகழ்வுகளில் நடனமாடி இருக்கிறேன். கேரளாவைச் சேர்ந்த ஒரு பரதநாட்டிய ஆசிரியரிடம் ஆறாம் வகுப்பு வரையிலும் பரதம் கற்றுக் கொண்டேன். திருமணம் மற்றும் சுபகாரிய நிகழ்வுகளில் நடனமாடுவது என் மனதுக்கு நெருக்கமான செயலாக இருந்தது. அப்போது எனக்குப் படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லை. தேர்ச்சிப் பெற்றால் போதும் என்கிற மனநிலை மட்டுமே இருந்தது. அப்படியிருந்தும் பத்தாம் வகுப்புப் பொதுத்
தேர்வில் தோல்வியடைந்து வீட்டில் இருந்தேன்.
ஆயர் இல்லத்திலிருந்து எங்கள் ஊர் தேவாலயத்துக்கு ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது. 200 ரூபாய் கட்டணத்தில், ‘களரி மக்கள் பண்பாட்டு மையம்’ கிராமிய ஆட்டக்கலைகளை கற்றுத்தரும் அறிவிப்பு அது. கன்னியாஸ்திரி ஒருவர்தான் எனக்கான தொகையைக் கட்டி என்னை பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். மே மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி. கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், லெஸ்ஸிம் ஆகிய ஆட்டக்கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சி முடிந்த அடுத்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெற்றவர்களின் அரங்கேற்றம். அதில் என்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருந்ததை ஒட்டி, களரி கலைக்குழுவில் இணைந்து கொள்ளும்படி கேட்டனர்.
ஆட்டக்கலை மீதிருந்த ஆர்வத்தில் நானும் சம்மதித்தேன். 12ம் வகுப்பு முடித்ததும் இளைங்கலைப் பொருளாதாரம் பயின்றேன். படிப்புக்கு இடையிடையே களரி கலைக்குழுவின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பங்காற்றவும் செய்தேன்.களரி கலைக்குழுவில் இணைந்ததுதான் என் வாழ்வின் திருப்புமுனை. ஆட்டம் என்பது கொண்டாட்டமான நிகழ்வு மட்டுமல்ல… வீரியம் மிக்கது என்பதை பல கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக உணர முடிந்தது. தலித் ஒடுக்குமுறைகள், பெண்ணுரிமை மறுப்பு என சமூகத்தின் பல்வேறு படிநிலையிலான பிரச்னைகளைப் பற்றியும், அதற்கு கலைகள் சார் முன்னெடுப்புகளைப் பற்றியும் கற்றுக் கொள்ள முடிந்தது.
ஆடல், பாடல், நாடகம் என பற்பல நிகழ்வுகளை அரங்கேற்றினோம். எல்லாமே சமூக மாற்றம் கோருபவைதான். கலைக்குழு செயல்பாடுகளில் அதிக அளவில் பங்கேற்றுக் கொண்டிருந்த வேளையில், கிராமியக் கலைகளுக்குள் இயங்குவதுதான் எனது வாழ்க்கை என்பதை உறுதிபடத் தீர்மானித்தேன்’’ எனும் செல்வி, ஆட்டக்கலைகளின் பயிற்சி நூலையும் தொகுத்திருக்கிறார். “களரி கலைக்குழுவில் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த போது, ஆட்டக்கலைகளை கற்றுக்கொள்வோருக்கும், பயிற்சியளிப்போருக்கும் வழிகாட்டும் பாடமுறைகளைக் கொண்டு நூல் கொண்டு வரலாம் என முடிவு செய்தோம்.
அதற்காக கிராமிய ஆடல் கலைகளின் முறையான ஆட்ட வடிவத்தையும் அதன் ஒவ்வொரு படிநிலைகளை விளக்கியும் ‘அடவு கட்டி ஆட’ எனும் நூலைத் தொகுத்தேன். சென்னை டான்போஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன் அண்ட் ஆர்ட்ஸ் மற்றும் களரி கலைக்குழு இணைந்து கிராமியக் கலைகள் குறித்தான ஆவணப்படம் தயாரித்தனர். அப்படத்தில் எனது ஆட்டமும், நான் பயிற்சியளிப்பதும் இடம் பெற்றிருக்கும். கால சூழலில் களரி கலைக்குழுவுக்குள் ஏற்பட்ட சிறு முரண்பாடுகள் காரணமாக, நான் மற்றும் சக கலைஞர்களான ஆனந்த், ஜாய், முனிய ராஜா, கிளாட்சன், சஜூ, ப்ரைட், செல்வகணேஷ் உள்பட 15 பேர் அங்கிருந்து வெளியேறி, ‘முரசு கலைக்குழு’வைத் தொடங்கினோம்.
‘எல்லோரும் சமம், பெண்களுக்கு முன்னுரிமை யும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும்’ என்பதை எங்களது கலைக்குழுவின் தீர்மானமாக முன்மொழிந்தோம். தலித் கலை விழாக்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கலைநிகழ்ச்சிகள், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான கூட்டங்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான கூட்டங்களில் எல்லாம் எங்களது கலைக்குழுவின் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. விளிம்புநிலை மக்களை தேடிச்சென்று தெருமுனைகளில் நடத்தும் இது போன்ற கலைநிகழ்ச்சிகள்தான் மக்களுக்கானவை.
இதற்காக கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை. தங்களது பலத்த கைதட்டல்கள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள் மக்கள்தான்” என்கிற செல்வியின் கணவர் ஆனந்த். இவர்களை இணைத்ததும் இந்தக் கலைதான்! “திருமணம் செய்து கொண்டு, ஒரு குடும்பத்தலைவியாக வீட்டை நிர்வகிப்பவளாக இருப்பதில் எனக்கு துளியளவும் உடன்பாடில்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் முறை மீது எனக்கு கடும் விமர்சனம் இருந்தது. அதனால் திருமணமே வேண்டாம் என்கிற முடிவில் இருந்தேன். களரி கலைக்குழுவிலிருந்து என்னுடைய கலைப் பயணத்தில் உடன் பயணித்து வந்தவர் ஆனந்த்.
அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். அச்சூழலில்தான் குழுவில் இருந்தவர்கள், ‘ஆனந்தைத் திருமணம் செய்து கொள்’ என்று தங்களது அபிப்ராயத்தைத் தெரிவித்தனர். பின்னர் நானும் அவரும் கலந்துரையாடி, புரிதலுக்குள் வந்து, திருமண முடிவெடுத்தோம். வரதட்சணையின்றி, தாலி மறுத்து இருவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட முற்போக்குத் திருமணம் புரிந்தோம். மகிழினி மணிமாறன்தான் எங்களது திருமணத்துக்கு முன்னின்று பூமாலை எடுத்துக் கொடுத்தவர்!” என்கிறார் செல்வி. இத்தம்பதிக்கு மகரந்தன், மேதினி என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூடப்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பறையாட்டம், கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், லெஸ்ஸிம், களியாட்டம், சக்கையாட்டம், சாட்டைக்குச்சி, சிலா (மான் கொம்பாட்டம்), கம்பத்தாட்டம், இருளர் ஆட்டம், குறும்பர் ஆட்டம், கோத்தகிரி கும்மி, கேரளா கும்மி, சோட்டா நாக்பூர் சாதிரி, வயநாடு துடி இனமக்கள் நடனம், குஜராத் கார்பா, சிர்மி, மாட்டுக்கொம்பாட்டம், சம்பல்புரி என்று நீள்கின்றன செல்வி கற்றுத் தேர்ந்திருக்கும் கலைகளின் பட்டியல். தமிழ் கிராமியக் கலைகளோடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் ஆட்டக்கலைகளும் இதில் அடங்குகின்றன.
“முரசு கலைக்குழு மூலமாக நிகழ்ச்சிகள் நடத்தி பயிற்சிகள் அளித்து வந்தாலும், இன்னமும் புதியதை கற்றுக்கொள்கிற ஆர்வம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கலைநிகழ்ச்சிகளுக்காக சென்றிருக்கிறேன். அப்படிச் செல்கையில் அப்பகுதி மக்களின் ஆட்டக்கலையையும் கற்றுக்கொண்டு வந்து விடுவேன். இப்படியாகத்தான் இத்தனை கலைகளையும் கற்றுக்கொள்ள முடிந்தது. குறும்பர் ஆட்டத்தை சத்தியமங்கலம் அருகே ஆசனூரிலும், கோத்தகிரியில் பழங்குடிகளின் கும்மியையும் கற்றுக்கொள்வதற்காக பயணம் செய்தேன்.
ஒவ்வொரு ஆட்டக்கலையும் அந்தந்த மக்களுடைய வாழ்வியலின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கம்பத்தாட்டம் என்பது நீலகிரி பகுதி மக்களின் ஆட்டம். தேயிலைப் பறித்து பின்னால் உள்ள கூடையில் போடும்படியான செயலின் ஆட்ட வடிவம் அது. இப்படியாக அன்றாட செயல்களை நளினப்படுத்தும்போது, அது ஆட்டக்கலையாக உருவெடுக்கிறது. இது போன்ற கலைகள் ஆளுமைத் தன்மையை வளர்க்கக் கூடியவை. உடல் மற்றும் மன நலத்துக்கும் உகந்தவை” என்கிறார் செல்வி.
கலைச் செயல்பாடுகள் ஒருபுறமிருந்தாலும் அவரது படிப்பு இன்றளவிலும் நீடித்துக் கொண்டிருக்கிறது. முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் படித்த செல்வி, 2008ல் சில மாதங்கள் சென்னை சிந்தி கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் ‘குமரி மாவட்ட காணி பழங்குடி மக்களின் நிகழ்த்துக் கலைகளும் தொடர்பியலும்’ என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
“டிஸ்கவரி சேனலில் பழங்குடி மக்கள் குறித்தான ஆவணப் படங்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அதன் விளைவாகத்தான் பழங்குடி மக்களின் கலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள எண்ணினேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, பேச்சிப்பாறை பகுதிகளில் காணி இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வாழை மற்றும் ரப்பர் விவசாயமே அவர்களது வாழ்வாதாரம். வனத்துக்குள் கிடைக்கும் விலைமதிப்புள்ள பொருட்களை சேகரம் செய்வது அவர்களது தொழிலாக இருந் தாலும், வனம் என்றைக்கு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ, அப்போதே இவர்களது சுதந்திரம் மறுக்கப்பட்டு விட்டது.
தொன்மையான வாழ்வியலையும், அது சார் கலைகளையும் கொண்டு அதை இன்று வரையிலும் பின்பற்றி வாழ்ந்து வருவதால்தான் அவர்களை ‘பழம் குடிகள்’ என்று கூறுகிறோம். இம்மக்களிடம் புராணக்கதைகளை மையப்படுத்திய ‘காக்கார் களி’ எனும் நாடக வடிவம் இருக்கிறது. இதை குறவன்-குறத்திக் களி என்றும் சொல்கின்றனர். கும்மி, கோலாட்டம், குறவன்- குறத்தி ஆட்டம் எனும் ஆட்டக்கலை களையும் கொண்டிருக்கிறார்கள். இம்மக்களின் கலை வடிவங்கள் எப்படி அவர்களது வாழ்வியலோடு தொடர்புபட்டவை என்பது பற்றியான ஆய்வை மேற்கொண்டிருக்கிறேன்” என்கிறார் செல்வி.
‘உலகின் மூத்த மொழி தமிழ்… நம்மிடம் தொன்ம அடையாளங்கள் பெருகிக் கிடக்கின்றன. முழுமையான வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ்த் தொன்மம்தான் உலகுக்கே முன்மாதிரி. நமது வாழ்வியலும் தமிழ் தொன்மத்துக்கு திரும்ப வேண்டும்’ என்பதுவே முழங்கும் செல்வியின் பறை நமக்குச் சொல்லுகிற சேதி…
தமிழர் இசையின் அடையாளமான பறையிசை முழக்கத்தோடு நம் தொன்ம ஆட்டக் கலைகளை அரங்கேற்றி பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் உள்ளாக்கும் சீரிய பணியை, இன்றைக்கு தமிழகத்தின் பல கலைக்குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. அப்படியாக நாகர்கோவிலில் இயங்கி வருகிறது ‘முரசு கலைக்குழு’. இக்குழுவை தொடங்கியவர்களுள் ஒருவர் செல்வி. மாஸ் கம்யூனிகேஷன் பயின்றவர். இப்போது நாடகத்துறையில் முனைவர் ஆய்வு மேற்கொள்கிறார் என்கிற தகவல்களையெல்லாம் தாண்டி, 32 வகை ஆட்டக்கலையை கற்றுத் தேர்ந்து பயிற்சியும் அளிப்பவர் என்பது இவரது முக்கிய அடையாளம்!
“கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் என் பூர்வீகம். இயற்கையோடு கொஞ்சிக் குலாவுகிற மலைக்கிராம வாழ்க்கை. காற்றாடி மலை எங்களது ஊரின் பெயர்… அது ‘தேவசகாயம் மவுண்ட்’ என பெயர் மாறியதற்கு பின்புலத்தில் ஒரு வரலாறு உள்ளது. 12ம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது கேப்டன் டே லெனாய் தலைமையிலான டச்சுப்படை போர் தொடுத்தது. அப்போது அரசராக இருந்த மார்த்தாண்ட வர்மன், தனது படையைக் கொண்டு போரில் வெற்றி பெற்று, டே லெனாயை கைது செய்தார். சிறையில் இருக்கும் காலகட்டத்தில் டே லெனாயும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படைத் தளபதி நீலகண்டப் பிள்ளையும் நட்பு கொள்கின்றனர்.
கிறித்துவ மதத்தின் கோட்பாடுகளை டே லெனாய் விளக்கவும், அதைக் கேட்ட நீலகண்டப் பிள்ளை கிறித்துவராக மாறி தனது பெயரை தேவசகாயம் என மாற்றிக் கொள்கிறார். இந்த மதமாற்றம் பிடிக்காத மார்த்தாண்ட வர்மன் தளபதி தேவசகாயத்தை இந்து மதத்தைப் பின்பற்றக் கூறுகிறார். இதற்கு மறுத்த காரணத்தால் தேவசகாயம் காற்றாடி மலையில் ஒரு சிறையில் அடைக்கப்பட்டு, பின் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால்தான் காற்றாடி மலை, தேவசகாயம் மவுண்ட் ஆனது.எங்களது ஊரில் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை ‘விபூதி புதன்’ கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
விபூதி புதனுக்கு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ச்சியாக 10 நாளைக்குத் திருவிழாதான். சிறு வயதிலிருந்தே தேவாலயத்தில் நடக்கும் கொண்டாட்ட நிகழ்வுகளில் நடனமாடி இருக்கிறேன். கேரளாவைச் சேர்ந்த ஒரு பரதநாட்டிய ஆசிரியரிடம் ஆறாம் வகுப்பு வரையிலும் பரதம் கற்றுக் கொண்டேன். திருமணம் மற்றும் சுபகாரிய நிகழ்வுகளில் நடனமாடுவது என் மனதுக்கு நெருக்கமான செயலாக இருந்தது. அப்போது எனக்குப் படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லை. தேர்ச்சிப் பெற்றால் போதும் என்கிற மனநிலை மட்டுமே இருந்தது. அப்படியிருந்தும் பத்தாம் வகுப்புப் பொதுத்
தேர்வில் தோல்வியடைந்து வீட்டில் இருந்தேன்.
ஆயர் இல்லத்திலிருந்து எங்கள் ஊர் தேவாலயத்துக்கு ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது. 200 ரூபாய் கட்டணத்தில், ‘களரி மக்கள் பண்பாட்டு மையம்’ கிராமிய ஆட்டக்கலைகளை கற்றுத்தரும் அறிவிப்பு அது. கன்னியாஸ்திரி ஒருவர்தான் எனக்கான தொகையைக் கட்டி என்னை பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். மே மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி. கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், லெஸ்ஸிம் ஆகிய ஆட்டக்கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சி முடிந்த அடுத்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெற்றவர்களின் அரங்கேற்றம். அதில் என்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருந்ததை ஒட்டி, களரி கலைக்குழுவில் இணைந்து கொள்ளும்படி கேட்டனர்.
ஆட்டக்கலை மீதிருந்த ஆர்வத்தில் நானும் சம்மதித்தேன். 12ம் வகுப்பு முடித்ததும் இளைங்கலைப் பொருளாதாரம் பயின்றேன். படிப்புக்கு இடையிடையே களரி கலைக்குழுவின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பங்காற்றவும் செய்தேன்.களரி கலைக்குழுவில் இணைந்ததுதான் என் வாழ்வின் திருப்புமுனை. ஆட்டம் என்பது கொண்டாட்டமான நிகழ்வு மட்டுமல்ல… வீரியம் மிக்கது என்பதை பல கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக உணர முடிந்தது. தலித் ஒடுக்குமுறைகள், பெண்ணுரிமை மறுப்பு என சமூகத்தின் பல்வேறு படிநிலையிலான பிரச்னைகளைப் பற்றியும், அதற்கு கலைகள் சார் முன்னெடுப்புகளைப் பற்றியும் கற்றுக் கொள்ள முடிந்தது.
ஆடல், பாடல், நாடகம் என பற்பல நிகழ்வுகளை அரங்கேற்றினோம். எல்லாமே சமூக மாற்றம் கோருபவைதான். கலைக்குழு செயல்பாடுகளில் அதிக அளவில் பங்கேற்றுக் கொண்டிருந்த வேளையில், கிராமியக் கலைகளுக்குள் இயங்குவதுதான் எனது வாழ்க்கை என்பதை உறுதிபடத் தீர்மானித்தேன்’’ எனும் செல்வி, ஆட்டக்கலைகளின் பயிற்சி நூலையும் தொகுத்திருக்கிறார். “களரி கலைக்குழுவில் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த போது, ஆட்டக்கலைகளை கற்றுக்கொள்வோருக்கும், பயிற்சியளிப்போருக்கும் வழிகாட்டும் பாடமுறைகளைக் கொண்டு நூல் கொண்டு வரலாம் என முடிவு செய்தோம்.
அதற்காக கிராமிய ஆடல் கலைகளின் முறையான ஆட்ட வடிவத்தையும் அதன் ஒவ்வொரு படிநிலைகளை விளக்கியும் ‘அடவு கட்டி ஆட’ எனும் நூலைத் தொகுத்தேன். சென்னை டான்போஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன் அண்ட் ஆர்ட்ஸ் மற்றும் களரி கலைக்குழு இணைந்து கிராமியக் கலைகள் குறித்தான ஆவணப்படம் தயாரித்தனர். அப்படத்தில் எனது ஆட்டமும், நான் பயிற்சியளிப்பதும் இடம் பெற்றிருக்கும். கால சூழலில் களரி கலைக்குழுவுக்குள் ஏற்பட்ட சிறு முரண்பாடுகள் காரணமாக, நான் மற்றும் சக கலைஞர்களான ஆனந்த், ஜாய், முனிய ராஜா, கிளாட்சன், சஜூ, ப்ரைட், செல்வகணேஷ் உள்பட 15 பேர் அங்கிருந்து வெளியேறி, ‘முரசு கலைக்குழு’வைத் தொடங்கினோம்.
‘எல்லோரும் சமம், பெண்களுக்கு முன்னுரிமை யும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும்’ என்பதை எங்களது கலைக்குழுவின் தீர்மானமாக முன்மொழிந்தோம். தலித் கலை விழாக்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கலைநிகழ்ச்சிகள், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான கூட்டங்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான கூட்டங்களில் எல்லாம் எங்களது கலைக்குழுவின் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. விளிம்புநிலை மக்களை தேடிச்சென்று தெருமுனைகளில் நடத்தும் இது போன்ற கலைநிகழ்ச்சிகள்தான் மக்களுக்கானவை.
இதற்காக கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை. தங்களது பலத்த கைதட்டல்கள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள் மக்கள்தான்” என்கிற செல்வியின் கணவர் ஆனந்த். இவர்களை இணைத்ததும் இந்தக் கலைதான்! “திருமணம் செய்து கொண்டு, ஒரு குடும்பத்தலைவியாக வீட்டை நிர்வகிப்பவளாக இருப்பதில் எனக்கு துளியளவும் உடன்பாடில்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் முறை மீது எனக்கு கடும் விமர்சனம் இருந்தது. அதனால் திருமணமே வேண்டாம் என்கிற முடிவில் இருந்தேன். களரி கலைக்குழுவிலிருந்து என்னுடைய கலைப் பயணத்தில் உடன் பயணித்து வந்தவர் ஆனந்த்.
அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். அச்சூழலில்தான் குழுவில் இருந்தவர்கள், ‘ஆனந்தைத் திருமணம் செய்து கொள்’ என்று தங்களது அபிப்ராயத்தைத் தெரிவித்தனர். பின்னர் நானும் அவரும் கலந்துரையாடி, புரிதலுக்குள் வந்து, திருமண முடிவெடுத்தோம். வரதட்சணையின்றி, தாலி மறுத்து இருவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட முற்போக்குத் திருமணம் புரிந்தோம். மகிழினி மணிமாறன்தான் எங்களது திருமணத்துக்கு முன்னின்று பூமாலை எடுத்துக் கொடுத்தவர்!” என்கிறார் செல்வி. இத்தம்பதிக்கு மகரந்தன், மேதினி என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூடப்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பறையாட்டம், கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், லெஸ்ஸிம், களியாட்டம், சக்கையாட்டம், சாட்டைக்குச்சி, சிலா (மான் கொம்பாட்டம்), கம்பத்தாட்டம், இருளர் ஆட்டம், குறும்பர் ஆட்டம், கோத்தகிரி கும்மி, கேரளா கும்மி, சோட்டா நாக்பூர் சாதிரி, வயநாடு துடி இனமக்கள் நடனம், குஜராத் கார்பா, சிர்மி, மாட்டுக்கொம்பாட்டம், சம்பல்புரி என்று நீள்கின்றன செல்வி கற்றுத் தேர்ந்திருக்கும் கலைகளின் பட்டியல். தமிழ் கிராமியக் கலைகளோடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் ஆட்டக்கலைகளும் இதில் அடங்குகின்றன.
“முரசு கலைக்குழு மூலமாக நிகழ்ச்சிகள் நடத்தி பயிற்சிகள் அளித்து வந்தாலும், இன்னமும் புதியதை கற்றுக்கொள்கிற ஆர்வம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கலைநிகழ்ச்சிகளுக்காக சென்றிருக்கிறேன். அப்படிச் செல்கையில் அப்பகுதி மக்களின் ஆட்டக்கலையையும் கற்றுக்கொண்டு வந்து விடுவேன். இப்படியாகத்தான் இத்தனை கலைகளையும் கற்றுக்கொள்ள முடிந்தது. குறும்பர் ஆட்டத்தை சத்தியமங்கலம் அருகே ஆசனூரிலும், கோத்தகிரியில் பழங்குடிகளின் கும்மியையும் கற்றுக்கொள்வதற்காக பயணம் செய்தேன்.
ஒவ்வொரு ஆட்டக்கலையும் அந்தந்த மக்களுடைய வாழ்வியலின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கம்பத்தாட்டம் என்பது நீலகிரி பகுதி மக்களின் ஆட்டம். தேயிலைப் பறித்து பின்னால் உள்ள கூடையில் போடும்படியான செயலின் ஆட்ட வடிவம் அது. இப்படியாக அன்றாட செயல்களை நளினப்படுத்தும்போது, அது ஆட்டக்கலையாக உருவெடுக்கிறது. இது போன்ற கலைகள் ஆளுமைத் தன்மையை வளர்க்கக் கூடியவை. உடல் மற்றும் மன நலத்துக்கும் உகந்தவை” என்கிறார் செல்வி.
கலைச் செயல்பாடுகள் ஒருபுறமிருந்தாலும் அவரது படிப்பு இன்றளவிலும் நீடித்துக் கொண்டிருக்கிறது. முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் படித்த செல்வி, 2008ல் சில மாதங்கள் சென்னை சிந்தி கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் ‘குமரி மாவட்ட காணி பழங்குடி மக்களின் நிகழ்த்துக் கலைகளும் தொடர்பியலும்’ என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
“டிஸ்கவரி சேனலில் பழங்குடி மக்கள் குறித்தான ஆவணப் படங்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அதன் விளைவாகத்தான் பழங்குடி மக்களின் கலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள எண்ணினேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, பேச்சிப்பாறை பகுதிகளில் காணி இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வாழை மற்றும் ரப்பர் விவசாயமே அவர்களது வாழ்வாதாரம். வனத்துக்குள் கிடைக்கும் விலைமதிப்புள்ள பொருட்களை சேகரம் செய்வது அவர்களது தொழிலாக இருந் தாலும், வனம் என்றைக்கு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ, அப்போதே இவர்களது சுதந்திரம் மறுக்கப்பட்டு விட்டது.
தொன்மையான வாழ்வியலையும், அது சார் கலைகளையும் கொண்டு அதை இன்று வரையிலும் பின்பற்றி வாழ்ந்து வருவதால்தான் அவர்களை ‘பழம் குடிகள்’ என்று கூறுகிறோம். இம்மக்களிடம் புராணக்கதைகளை மையப்படுத்திய ‘காக்கார் களி’ எனும் நாடக வடிவம் இருக்கிறது. இதை குறவன்-குறத்திக் களி என்றும் சொல்கின்றனர். கும்மி, கோலாட்டம், குறவன்- குறத்தி ஆட்டம் எனும் ஆட்டக்கலை களையும் கொண்டிருக்கிறார்கள். இம்மக்களின் கலை வடிவங்கள் எப்படி அவர்களது வாழ்வியலோடு தொடர்புபட்டவை என்பது பற்றியான ஆய்வை மேற்கொண்டிருக்கிறேன்” என்கிறார் செல்வி.
‘உலகின் மூத்த மொழி தமிழ்… நம்மிடம் தொன்ம அடையாளங்கள் பெருகிக் கிடக்கின்றன. முழுமையான வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ்த் தொன்மம்தான் உலகுக்கே முன்மாதிரி. நமது வாழ்வியலும் தமிழ் தொன்மத்துக்கு திரும்ப வேண்டும்’ என்பதுவே முழங்கும் செல்வியின் பறை நமக்குச் சொல்லுகிற சேதி…
No comments:
Post a Comment