Sumi Musiq
Sunday, July 31, 2016
Thursday, November 5, 2015
Sunday, August 9, 2015
காலங்கள்
மாற மாற இசையின் வடிவங்களும் பல பரிமாற்றங்களை கொண்டு வளர்ந்து வருகிறது.
கர்நாடக இசையில் இருந்து ராப், பாப், ஜாஸ் என தற்போது இளைய
தலைமுறையினருக்கு ஏற்ப இசைகள் , பாடல்கள் என புதிதாக வளர்ந்து வருகிறது.
நாதஸ்வரம், தவில், பறை, போன்ற இசை கருவிகள் மாறி பியானோ, ஹிதார் என
உருவங்களில் கூட மாற்றம் அடைந்துள்ளது. புல்லாங்குழல், பறை, கர்நாடக இசை
என அனைத்திலும் சிறந்து விளங்கி எண்ணற்ற இசை அமைப்பாளர்கள், இசை
வல்லுனர்கள் தமிழகத்தை தான் தாயாகமாக கொண்டு அதன் சிறப்பையும்,
மகத்துவத்தையும் பல நாடுகளுக்குப் பரப்பினர்.
அதிலும் நாட்டுப்புற கலைகளில் பிரபலமானது
நம் ஊர்தான். கும்மி பாட்டு, ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம்,
பறையாட்டம் , நாட்டுப்புற நடனம்; அனைத்திலும் சிறந்து விளங்கியது
தமிழகம்தான். நாட்டுப்புற கலைகளில் தேவையானது வாய் வழிப்பாட்டு மற்றும்
அதற்கேற்ப பின்னணி இசை போன்றவை கலாச்சார வடிவங்களை உண்மையில்
பிரதிபலிப்பதாகும். இந்த கலைக்களுக்கென்று எந்த ஒரு பயிற்சியும் தேவையில்லை
என்பதுடன் நம் அன்றாட வாழ்வியலில் நடக்கும் சம்பவங்களை அந்த இசைகள்
எதிரொலிப்பதாகும். கதை வடிவில் பாட்டுக்கள் பாடுவது அந்த காலத்து
கிராமப்புற கலைகளின் மற்றொரு சிறப்பாகும். இவ்வாறு இசையின் முலம் கதைகளை
பாடும் கலைகளில் ஒன்றானது வில்லுப்பாட்டு.
மற்ற கிராமிய பாடல்களுக்கும்
வில்லுப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் நாட்டுப்புற
பாடல்களுக்கான அனைத்து அமசங்களும் நிரம்பியுள்ளதாகும். இதற்;கு
பயன்படுத்தும் கருவிகள், பாடும் முறை என அனைத்தும் மக்களை ஈர்க்கும்
விதமாகவே இருந்தது, ஆனால் தற்போது இந்த கலைகள் அழிந்துக் கொண்டேப் போகிறது.
ஆண்களே முன்னிறுத்திக் கொண்டு செல்ல வேண்டிய ஒரு கலையை நயினாரகரம் என்னும்
கிராமத்தில் சுப்புலட்சுமி என்னும் பெண்மணி தமிழ் நாட்டில் மட்டுமின்றி
பிற மாநிலங்களுக்கும் வில்லிசைக் கலையைப் பரப்பியுள்ளார். திருநெல்வேலி
மாவட்டம் தென்காசி வட்டாரத்தில் நயினாரகரம் என்னும் ஊராட்சியில் வாழ்ந்து
வருபவரான இவர் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக வில்லுப்பாட்டை
பாடியுள்ளார்.
வில்லிசை பாடுவது என்பது பாடல் மட்டுமின்றி ஒரு கதையுடன் இசையை சேர்த்து
பாடுவதாகும். இவரின் இந்த திறமை தந்தையார் சங்கரளிங்கத்திடமே வந்துள்ளது
.இவர் பெருமாள் தேவர் எனும் வில்லிசை கலைஞர்ரிடம் பிற்ப்பாட்டு பாடுபவராக
இருந்துள்ளார். இதுவே சுப்புலட்சுமி வில்லிசை கலையில் ஈடுபட ஒரு வித்தாக
இருந்துள்ளது. பின்னர் பெருமாள் தேவரிடமே மாணவியாக சேர்ந்து நான்கு வருடம்
இந்த இசையை கற்றுள்ளார்.
பின்னர் இந்த கலையை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சென்று அரங்கேற்றம்
செய்தார். அத்துடன் பிறமாநிலங்களான மும்பை வரை வில்லிசை கலையை
அரங்கேற்றியுள்ளார். சென்னை பொதிகை தொலைக்காட்சியிலும், திருநெல்வேலி
வானொலி நிலையத்திலும் பல முறை வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
விவசாயத்தை தலைப்பாக கொண்டு வில்லுப்பாட்டு முலம் பல்வேறு விழிப்புணர்வு
நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் . பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை
நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியுள்ளார்
நயினரகரம் அருகே உள்ள சிற்றுரான பால மார்த்தாண்டப்புறத்தில்
இவர் பிறந்துள்ளார். தனது பதிமூன்றாம் வயதில் ஆரம்பித்த வில்லிசை
பயிற்சியை பதினேழாம் வயதில் முடித்து கொண்டு தனது முதல் அரங்கேற்றத்தை
பிறந்த ஊரில் உள்ள முப்படாதியம்மன் கோயிலில் நிகழ்த்தியுள்ளார். தனது 28ம்
வயதில் திருமணம் செய்து கொண்ட இவர் நாளடைவில் தனது கணவரையும் தன்னுடன்
இணைத்து கொண்டு தான் முன்னின்று நடத்தும் நிகழ்ச்சிகளில் பிற்பாட்டு
பாடுபவராக மாற்றியுள்ளார்
பொதுவாக அம்மன், அய்யனார் போன்ற கடவுள்களின் கதைகளும், புராணக்
கதைகளான ராமாயணம், மகாபாரதக் கதைகளையும் மற்றும் விவசாயத்தை சார்ந்த
கதைகளும் வில்லிசை மூலம் தெரியப்படுத்தியுள்ளார். வில்லிசை அரங்கேற்றம்
செய்வதற்கு முன் அதில் உள்ள 9 ராகம், 11 தளங்கள் மட்டும் அல்லாது
கதைகளையும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். இவ்வளவு பெருமைக்குரிய
சுப்புலட்சுமி 5ம் வகுப்பு வரை படித்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
5ம் வகுப்பு வரை படித்திருந்தாலும்,
'வில்லிசை அனாதி' என அழைக்கப்படுகிறார். வில்லுப்பாட்டு என்பது வில்லிசை
அனாதி மட்டும் இல்லாமல் பிற்பாட்டுப்படிப்பவரின் தேவையும் இதற்கு அவசியம்.
ஒரு முழுமையான வில்லிசை என்பது குடம், உடுக்கை, கட்டை மற்றும் கைத்தாளம்
போன்ற வடிவங்கள் இணைத்தால் மட்டுமே நல்ல இசை பிறக்கும். வில்லுப்பாட்டு
மூலம் 25 தங்கப் பதக்கங்களும், மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து
விருதுகளும் போன்ற பல பரிசுகளைப் பெற்றுள்ளார். தற்போது, சுப்புலட்சுமி
வில்லுப்பாட்டு பாடுவத்தில்லை. மேலும், பல நுற்றாண்டுகளாக செழிப்பாக இருந்த
இவ்வகையான கிராமியக் கலைகள் தற்போது நயினாரகரம் மட்டுமின்றி தமிழ்நாட்டில்
குறைந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.
மிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றி உறவாடிய கலைகளில் முதன்மையான கலை கிராமியக்கலை.
கிராமங்களில் வசிக்கும் மக்களின் இன்ப துன்பங்களில் பின்னிப் பிணைந்து வளர்ந்தவைகளே
இக்கிராமியக்கலைகள். இதனை நாட்டுப்புறக் கலைகள் என்றும் அழைப்பர். தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி
வரையில் கிராம மக்களின் வாழ்வோடு இணைந்து வளர்ந்தவை கிராமியப் பாடல்களாகும். பழந்தமிழகத்தில்
நகரங்களைக் காட்டிலும் கிராமங்களே மிகுதியாக இருந்தன. பண்டைக் கால கிராமங்கள் நாகரிகத்திலும்
பண்பாட்டிலும் நகரங்களுக்கு ஈடாகவே விளங்கின. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி
வளர்ந்தனவைகளே கிராமியக் கலைகள். அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.
பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி, கோலாட்டம் என மூன்று வகையான ஆட்டங்கள் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளன. பள்ளி, கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளிலும் கோலாட்டம் நடத்துவார்கள்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், பொதிக மலையில் காணிக்காரர்களான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். குமரிமாவட்டம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதி மலைகளிலும் காணிக்காரர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு வகையான கோலாட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். காணிக்காரர்கள் ஓணம் பண்டிகை, கார்த்திகை கொடுதி, (வணங்கப்படும் குலதெய்வங்களுக்கு விழா எடுப்பது) திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் கோலாட்டத்தை நடத்துகின்றார்கள். மூத்த கலைஞர்களிடம் இருந்து இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் கோலாட்டத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
பின்னல் கோலாட்டத்தைப் பெண்கள் மட்டுமே நடத்துகிறார்கள். கோவில் விழா, குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்களில் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இது சாதாரண கோலாட்டத்தில் இருந்து மாறுபட்டது. நன்றாகப் பயிற்சி பெற்ற பெண்களால் மட்டுமே ஆட முடியும்.
கோவில்மண்டபம் போன்று மேற்கூரையுள்ள அரங்கங்களில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தமுடியும். கூரையில் சேர்த்துக்கட்டப்பட்ட பல வண்ணத்துணிகளை ஒருகையால் பிடித்துக் கொண்டு கோலாட்டம் போலாடுவது தான் பின்னல் கோலாட்டமாகும்.
இவ்வாறு ஆடிக்கொண்டே துணியில் பின்னல்போடுவதும், பின்னரவற்றைச் சிக்கலின்றி அவிழ்ப்பதும் இந்தஆட்டத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். ஒருவர் தவறாக ஆடினாலும் பின்னலில் ஏற்பட்டச் சிக்கல்களை அவிழ்க்கமுடியாது. ஒவ்வொரு திசைக்கும் மூன்று பெண்கள் வீதம் எதிரெதிர்திசையில் நின்று கொண்டு, நளினத்துடன் இந்த நடனத்தை ஆடுவது பார்வையாளர்களைக் கவர்ந்து இழுக்கும்.
கோலாட்டம்
முக்கிய கலைகளில் ஒன்றான கோலாட்டம் குறித்த தகவல்களை இங்குக் காண்போம். குச்சிகளைக் (கோல்)
கையில் பிடித்துக் கொண்டு பாடலோடு ஆடுவதே கோலாட்டம். ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே
ஆடிவந்த கோலாட்டம் இன்று சில இடங்களில் இருபாலரும் சேர்ந்து ஆடும் ஆட்டமாகவும் மாறியுள்ளது.
கோலாட்டத்திற்கு என்று பிரத்யேகப் பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல் முதலில் மெதுவாகத் தொடங்கும்.
பின்னர் போகப் போக வேகம் எடுக்கும். கோலாட்டம் ஆடுவதற்குப் பயிற்சி பெரிதும் தேவைப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களில் கோலாட்டம் ஆடுவது தமிழகத்தில் பல பகுதிகளில் வழக்கத்தில்
உள்ளது.பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி, கோலாட்டம் என மூன்று வகையான ஆட்டங்கள் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளன. பள்ளி, கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளிலும் கோலாட்டம் நடத்துவார்கள்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், பொதிக மலையில் காணிக்காரர்களான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். குமரிமாவட்டம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதி மலைகளிலும் காணிக்காரர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு வகையான கோலாட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். காணிக்காரர்கள் ஓணம் பண்டிகை, கார்த்திகை கொடுதி, (வணங்கப்படும் குலதெய்வங்களுக்கு விழா எடுப்பது) திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் கோலாட்டத்தை நடத்துகின்றார்கள். மூத்த கலைஞர்களிடம் இருந்து இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் கோலாட்டத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
பின்னல் கோலாட்டம்
கோலாட்டத்தின் இன்னொரு வகையான ஆட்டம் பின்னலாட்டம். இதனைக் கயிற்றுப்பின்னலாட்டம் என்றும்
அழைப்பர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இந்தக் கலை உள்ளது. சௌராஷ்டிர மொழியில்
இதனைப் பாண்டியாக ரக நடனம் என்பர். ராஜஸ்தானி மொழியில் கர்பா நடனம் என்றும், ஆந்திராவில்
ஜடை கோலாட்டம் என்றும் அழைக்கிறார்கள்.பின்னல் கோலாட்டத்தைப் பெண்கள் மட்டுமே நடத்துகிறார்கள். கோவில் விழா, குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்களில் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இது சாதாரண கோலாட்டத்தில் இருந்து மாறுபட்டது. நன்றாகப் பயிற்சி பெற்ற பெண்களால் மட்டுமே ஆட முடியும்.
கோவில்மண்டபம் போன்று மேற்கூரையுள்ள அரங்கங்களில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தமுடியும். கூரையில் சேர்த்துக்கட்டப்பட்ட பல வண்ணத்துணிகளை ஒருகையால் பிடித்துக் கொண்டு கோலாட்டம் போலாடுவது தான் பின்னல் கோலாட்டமாகும்.
இவ்வாறு ஆடிக்கொண்டே துணியில் பின்னல்போடுவதும், பின்னரவற்றைச் சிக்கலின்றி அவிழ்ப்பதும் இந்தஆட்டத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். ஒருவர் தவறாக ஆடினாலும் பின்னலில் ஏற்பட்டச் சிக்கல்களை அவிழ்க்கமுடியாது. ஒவ்வொரு திசைக்கும் மூன்று பெண்கள் வீதம் எதிரெதிர்திசையில் நின்று கொண்டு, நளினத்துடன் இந்த நடனத்தை ஆடுவது பார்வையாளர்களைக் கவர்ந்து இழுக்கும்.
சிலம்பாட்டம்
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் குறித்த தகவல்களை இங்குக் காண்போம்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சிலம்பாட்டக்கலை பெருமளவு
நட்ததப்படுகிறது.
சினிமா படங்களில் சண்டைக்காட்சிகளில் சிலம்பாட்டக் கலையைக் காட்ட தொடங்கிய பின்பு, தமிழகத்தின் இளைஞர்கள் ஆர்வமாக கற்றுக்கொள்ளும் கலையாக மாறி விட்டது.
சிலம்பம் கற்ற ஆசான் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். 7வயது முதல் 25வயதுக்கு உட்பட்டவர்கள் இக்கலையைப் பயில வேண்டும் என்று சிலம்பப்பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த வயதில்தான் சிலம்பம் பயில ஏற்ற உடல் வாகும், உடல் அசைவும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு நல்ல நினைவாற்றலும் தேவை.கம்புகளின் வீச்சையும், அசைவையும் கவனிக்கும் வகையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே நினைவாற்றல் உள்ளவர்கள் சிறந்த வீர்ர்களாக உருவாக முடியும். சிலம்பம் பயிலும் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் பயிற்சி செய்கின்றனர். பயிற்சி முடிந்ததும் உளுந்து,பாசிப்பயறு கலந்த கூழைக் குடிக்கின்றனர். தென்னந்தோப்பு, ஆற்றங்கரை யோரம் மற்றும் மேடான பகுதிகளில் சிலம்ப பயிற்சி நடைபெறும்.
சிலம்ப நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு அடையாளமாக முதலில் செண்டை மேளம் அடிப்பார்கள். பின்னர் கற்றுக்கொடுத்த ஆசானை வணங்கும் வகையில், கலைஞர்கள் சிலம்ப ஆட்டத்தில் வணக்க வித்தையை அடிப்பார்கள். சிலம்பத்தில் அனைத்துவகை ஆட்டமுறைகளையும் ‘சுவடு’ அல்லது ‘செவிடு’ என்ற சொல்லின் மூலம் குறிப்பிடுகிறார்கள்.
குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடப்படும் சிலம்ப ஆட்டத்தைத் ‘தெக்கசெவிடு’என்றும் அழைக்கிறார்கள். சுவடு வகை வித்தைகளைப் பொன்னுசுவடு, தேங்காய்சுவடு, ஒத்தை சுவடு, குதிரை சுவடு, உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
சிலம்பம் மட்டுமின்றி ஆயுதங்கள், கயிறு, தீப்பந்தம் ஆகியவற்றைக் கொண்டு வீர விளையாட்டுக்களையும் சிலம்பக்கலைஞர்கள் ஆடி,பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார்கள்.
சிலம்பத்தில் கடாரி, படவாள், சடவாள், கண்டக்கோடரி, சுருட்டுவாள்,ரெட்டு ஆகியவற்றையும் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. தற்போது சிலம்பக்கலை மக்களிடம் பிரபலமாக உள்ளது. சிலம்பம் படித்தால் வர்மக் கலையையும் அறிய முடியும் என்பதால், சிலம்ப பயிற்சியில் சேர்வதற்கு படித்தவர்களும் கூட ஆர்வமாக முன்வருகிறார்கள். சிலம்பம் சிறந்த தற்காப்புக் கலையாகவும் விளங்குகிறது.
சினிமா படங்களில் சண்டைக்காட்சிகளில் சிலம்பாட்டக் கலையைக் காட்ட தொடங்கிய பின்பு, தமிழகத்தின் இளைஞர்கள் ஆர்வமாக கற்றுக்கொள்ளும் கலையாக மாறி விட்டது.
சிலம்பம் கற்ற ஆசான் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். 7வயது முதல் 25வயதுக்கு உட்பட்டவர்கள் இக்கலையைப் பயில வேண்டும் என்று சிலம்பப்பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த வயதில்தான் சிலம்பம் பயில ஏற்ற உடல் வாகும், உடல் அசைவும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு நல்ல நினைவாற்றலும் தேவை.கம்புகளின் வீச்சையும், அசைவையும் கவனிக்கும் வகையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே நினைவாற்றல் உள்ளவர்கள் சிறந்த வீர்ர்களாக உருவாக முடியும். சிலம்பம் பயிலும் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் பயிற்சி செய்கின்றனர். பயிற்சி முடிந்ததும் உளுந்து,பாசிப்பயறு கலந்த கூழைக் குடிக்கின்றனர். தென்னந்தோப்பு, ஆற்றங்கரை யோரம் மற்றும் மேடான பகுதிகளில் சிலம்ப பயிற்சி நடைபெறும்.
சிலம்ப நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு அடையாளமாக முதலில் செண்டை மேளம் அடிப்பார்கள். பின்னர் கற்றுக்கொடுத்த ஆசானை வணங்கும் வகையில், கலைஞர்கள் சிலம்ப ஆட்டத்தில் வணக்க வித்தையை அடிப்பார்கள். சிலம்பத்தில் அனைத்துவகை ஆட்டமுறைகளையும் ‘சுவடு’ அல்லது ‘செவிடு’ என்ற சொல்லின் மூலம் குறிப்பிடுகிறார்கள்.
குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடப்படும் சிலம்ப ஆட்டத்தைத் ‘தெக்கசெவிடு’என்றும் அழைக்கிறார்கள். சுவடு வகை வித்தைகளைப் பொன்னுசுவடு, தேங்காய்சுவடு, ஒத்தை சுவடு, குதிரை சுவடு, உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
சிலம்பம் மட்டுமின்றி ஆயுதங்கள், கயிறு, தீப்பந்தம் ஆகியவற்றைக் கொண்டு வீர விளையாட்டுக்களையும் சிலம்பக்கலைஞர்கள் ஆடி,பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார்கள்.
சிலம்பத்தில் கடாரி, படவாள், சடவாள், கண்டக்கோடரி, சுருட்டுவாள்,ரெட்டு ஆகியவற்றையும் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. தற்போது சிலம்பக்கலை மக்களிடம் பிரபலமாக உள்ளது. சிலம்பம் படித்தால் வர்மக் கலையையும் அறிய முடியும் என்பதால், சிலம்ப பயிற்சியில் சேர்வதற்கு படித்தவர்களும் கூட ஆர்வமாக முன்வருகிறார்கள். சிலம்பம் சிறந்த தற்காப்புக் கலையாகவும் விளங்குகிறது.
தமிழக நாட்டுப்புற கலைகள் - உமயபார்வதி
தமிழக நாட்டுப்புற கலைகள் - முனைவர் எஸ். உமயபார்வதி
(நன்றி: பரஞ்சோதி)
அறிமுகம்:-
ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பலகனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் சிறந்த கருவி.
நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்க வழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.
இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே. இவற்றினை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவைதான்.
அதே சமயம் நாம் நம்முடைய பாரம் பரியத்தன்மைகளையும், கலை மரபுகளையும் ஒதுக்கிட வேண்டியதில்லை. நம்முடைய பாரம்பரியத் தன்மைகளை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கடமையும், பொறுப்பும் அவசியமும் நமக்கு இருக்கிறது. தொழில் நுட்பத்தின், வளர்ச்சி அடைந்த நாடுகளும், அதிநவீன நாகரிகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடுகளும்கூட, தங்களுடைய பாரம்பரியக் கலைகளைப் புறக்கணித்துவிடவில்லை தங்களுடைய எல்லா வளர்ச்சிக்கும் அதனையே ஆதராமாகக் கொண்டுள்ளன.
நமது இந்தியக் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றினைக் கொண்டுள்ளன. இவை தனக்கே உரித்தான தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் கொண்டவை.
வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கலவையாக சில கலைகளை கிராமங்கள் நமக்கு அளித்துள்ளன. அவை பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் வளம் சேர்ப்பனவாகும். ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றத்திற்கு உரம் சேர்ப்பதாகவும் அமைந்திருப்பதனை அறியமுடிகிறது.
இந்திய நாட்டுப்புறக் கலைகளில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு வகைகளில் சிறப்பும் தனித்தன்மையும் கொண்டவை. இவைகளை நிகழ்த்துக் கலைகள் (Preforming Arts) நிகழ்த்தாத கலைகள் (Non-Performing Arts) பொருட்கலை (material Arts) என நாட்டுப்புறவியல் வல்லுனர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
பொதுவாக தமிழக நாட்டுப்புற கலைகள்:-
1. ஒயிலாட்டம் 2. ஆலியாட்டம் 3. கோலாட்டம் 4. கரகாட்டம் 5. காவடி ஆட்டம் 6. கும்மி 7. வில்லுப்பாட்டு 8. தெருக் கூத்து 9. பாவைக் கூத்து (பொம்மலாட்டம்) 10. கனியான் ஆட்டம், 11. வர்மம் 12. சிலம்பாட்டம். 13. களரி 14. தேவராட்டம் 15. சக்கையாட்டம் 16. பொய்க்கால் குதிரை ஆட்டம் 17. மயிலாட்டம் 18. உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு) 19. தப்பாட்டம் 20. உக்கடிப்பாட்டு 21. இலாவணி 22. கைச்சிலம்பாட்டம் 23. குறவன் குறத்தியாட்டம் 24. துடும்பாட்டம் 25. புலி ஆட்டம் 26. பொம்மைக் கலைகள் 27. மண்பாண்டக் கலை 28. கோலக் கலை
இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
கிராமியக் கலைகள்:-
ஒயிலாட்டம்
கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி, திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.
கோலாட்டம்
கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.
கரகாட்டம்
மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறைவழி பாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.
காவடி ஆட்டம்
காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.
கும்மி
தமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.
வில்லுப்பாட்டு
தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச் செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரைநடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர் பாமர மக்களிடையே பரப்பினார்.
தெருக்கூத்து
பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.
தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.
பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)
பொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது. பொம்மைகள் தோல் பொம்மைகள், மண் பொம்மைகள் என இருவகைப்படும்.
தமிழ் நாட்டில் இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. பாவைகளை மரத்தாலும், தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக் கலைக்கு ''பாவைக் கூத்து'' எனப்பெயர்.
மரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில் புரளுமாறு ஆடைகள் பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல் மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றி பொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத் தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது.
சிலம்பாட்டம்
சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் சிறப்புற்று விளங்கினாலும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் விளையாடும் சிலம்பாட்டமே சிறப்பானது. இதில் கம்பிகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ''களிரிப்பயிற்று'' என்று கூறுவர். புத்த சமயத்துறவிகள் மூலம் இந்தப் போர்க்கலை žனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றது என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இக்கலை சிறந்த மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டில் கராத்தே என்று அழைக்கப்படுகிறது.
பொய்க்கால் குதிரை
புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.
கேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
உறியடி விளையாட்டு
உறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.
உடுக்கடிப்பாட்டு
மழையின்றித் தவிக்கும் காலத்தில் பல ஊர்களில் உடுக்கடிப்பாட்டு நடத்தப்படும் இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இக்கலை நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. காத்தவராயன் கதையைப் பாடுவதே பெரு வழக்கமாக உள்ளது.
புலியாட்டம்
தேரோட்டம், சாமி ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போன்ற வேடமிட்டு ஆடுவர். மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடுவர். இவ்விருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டந்தான் புலி ஆட்டம் என்பர்.
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பல்வேறு
ஆய்வாளர்கள்
பல்வேறு முறைகளில் வகைப்படுத்தியுள்ளனர். பேராசிரியர் ஏ.என். பெருமாள்
நிகழ்த்து
கலைகளில் கலந்துகொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு
தனியார் கலை(Individual art), குழுவினர் கலை(group art) என்றும்
பிரித்துள்ளார். மயிலாட்டம்
குதிரையாட்டம், கரடியாட்டம், நொண்டி நாடகம் போன்றவை தனியார் கலைகளாக
அமைகின்றன. வில்லுப்பாட்டு, தேவராட்டம் தெருக்கூத்துப் போன்றவை குழுவினர்
கலைகளாக அமைகின்றன
என்கிறார். கலந்துகொள்ளும் கலைஞர்களின் பால்(Sex) அடிப்படையில் ஆடவர் கலை,
மகளிர்
கலை, ஆடவர் - மகளிர் கலை என்றும், நிகழ்த்தப்படும் காலம், சூழல், நோக்கம்
ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டு சமூகம்சார் கலைகள்(Society based arts), சமயம்சார்
கலைகள்(Religion based arts) என்றும் பலவாறாகப் பிரித்துக்
கூறிவிட்டு, ‘கலைகளை
வகைப்படுத்துவது சிக்கலானது’ என்றும் கூறுகிறார்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
முனைவர் ஆறு. இராமநாதன்(2001) நாட்டுப்புற நிகழ்த்து
கலைகளை, அ. நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், ஆ. ஆட்டங்கள் என்று இரு பெரும்
பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளார்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
அ. நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
நாதசுர இசைக் கச்சேரிகள்(நாட்டுப்புற நாதசுரம், நாட்டுப்புற
மேளம் கொண்டவை). கே.ஏ. குணசேகரன், விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன்,
கோட்டைச்சாமி, புஷ்பவனம் குப்புசாமி போன்றோரின் பாடல் நிகழ்ச்சிகள் இந்தப் பிரிவில்
அடங்குவன.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
ஆ. ஆட்டங்கள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்டங்கள் என்னும் இந்தப் பிரிவு கருவி இசை
ஆட்டங்கள், பாட்டு ஆட்டங்கள், அரங்கக் கலைகள், கதை கூறல், போர்க் கலைகள்,
வித்தைகள் என ஆறாக
வகைப்படுத்தப்படுகின்றன.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
1. கருவி இசை ஆட்டங்கள் : கருவி இசைக்கேற்ப ஒருவரோ பலரோ
ஒப்பனையுடன் ஆடும் ஆட்டங்கள் இவ்வகையில் அடங்கும். கரகாட்டம், பொய்க்கால் குதிரை
ஆட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், கரடி ஆட்டம், வழியாட்டம், புலி வேடம்,
ஒப்பாட்டம், காளி திருநடனம், கொக்கலிக்கட்டை ஆட்டம், வீரபத்ரசாமி ஆட்டம்,
தேவராட்டம், சேவையாட்டம் இவை இவ்வகையில் அடங்கும்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||
கலை தொடர்பான காவடி ஆட்டத்தில் கலைஞர்கள்
பங்குபெறுவர்.
இவர்களின் காவடிதண்டு மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆட்டக்காரர்கள்
காவடியைத் தலை உச்சி, நெற்றி, மூக்கு நுனி ஆகியவற்றில் நிறுத்திக்
காட்டுவர். நையாண்டி மேளத்திற்கு ஏற்ப இவர்கள் காவடியோடு ஆடுவது சிறப்பாக
இருக்கும். ஆண்களே
ஆடுவர்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||
2. பாட்டு ஆட்டங்கள் : கருவி இசையோடு பாடல்கள் பாடிக்கொண்டு
அல்லது பிறர் பாடும் பாட்டிற்கேற்றபடி ஆடும் ஆட்டங்கள் இவ்வகையில் அடங்கும். குறவன்
குறத்தி ஆட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், பேயாட்டம், சாமியாட்டம், கருப்பாயி ஆட்டம்,
பாம்பு நடனம், கைச்சிலம்பாட்டம், உறியடி, மயானக் கொள்ளை, கோணங்கி ஆட்டம் போன்றன இவை
.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||
கிராம நாடகம், மகாபாரதம், முருகன் - வள்ளி, காத்தவராயன்,
மதுரைவீரன் போன்ற கதைகளைப் பாடல்களாகப் பாடி ஆடுவார்கள். கிராமத்துக் கோவில்
விழாக்களில் இது பெரும்பாலும் நடைபெறும்.
|
Subscribe to:
Posts (Atom)